
ஷா ஆலம், ஜூன் 26 – நேற்றிரவு, தெற்கு கிளாங் பள்ளத்தாக்கு விரைவுச்சாலையின் (SKVE) கிலோமீட்டர் 51.1-ல், நடந்த மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் வேக கட்டுப்பாட்டை இழந்து, ஒரு மோட்டார் மற்றொறு மோட்டாருடன் மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுமே உயிரிழந்துள்ளனர்.
நடந்த இவ்விபத்தில், மேலும் இருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெற்கு கிளாங் மாவட்ட காவல்துறைத் தலைவர், ரம்லி காசா தெரிவித்துள்ளார்.
15 மற்றும் 25 வயதுடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாகவும், 24 மற்றும் 15 வயதுடைய மற்ற இருவரும் சிகிச்சைக்காக கிளாங்கிலுள்ள தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனைக்கு (HTAR) அனுப்பப்பட்டதாகவும் ரம்லி கூறியுள்ளார்.
இந்நிலையில் ,விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிள் பாகங்கள் சாலையில் சிதறி கிடைப்பதைக் காட்டும் காணொளிகள் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளன.
இவ்வழக்கு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதோடு தகவல் தெரிந்த பொதுமக்கள் காவல்துறையினரை உடனடியாக அணுக வேண்டுமெனவும் கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.