Latestமலேசியா

அமெரிக்கா தாக்குதல் இலக்கைத் தவறவிட்டதா?; CNN பணியாளர் பணிநீக்கம்

அமேரிக்கா, ஜூன் 26 – ஈரானிய அணுசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்க வான்வழித் தாக்குதல்கள் குறித்த ஆரம்ப உளவுத்துறை மதிப்பீட்டைப் பற்றி சிஎன்என் (CNN) நிருபர் வெளியிட்ட செய்தியைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அவரை பணி நீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளார்.

இச்செய்தி தவறான தகவல்களைப் பரப்பியதாகவும், சம்பந்தப்பட்ட இராணுவ விமானிகளின் நற்பெயருக்கு சேதம் விளைவித்ததாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரானிய பாதுகாப்பு புலனாய்வு அமைப்பின் மதிப்பீட்டின் அடிப்படையில், மூன்று முக்கிய அணுசக்தி நிலையங்கள் மீதான தாக்குதல்கள் நாட்டின் அணுசக்தி திட்டத்தில் தற்காலிக தாக்கத்தை மட்டுமே ஏற்படுத்தியதாகவும், அதனைப் பிற ஊடகங்கள் உறுதிப்படுத்தியாதாகவும் அறியப்படுகின்றது.

இந்நிலையில் அமெரிக்காவின் தாக்குதல் ஈரானின் முழு அணுசக்தி திட்டத்தையும் அழித்துவிட்டது என்று டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!