Latestமலேசியா

நின்று கொண்டிருந்த பஸ்ஸில் மோட்டார் சைக்கிள் மோதியது இளைஞர் பரிதாப மரணம்

கூலாய், ஜூன் 30 – வடக்கு – தெற்கு நெடுஞ்சாலையின் 18.3 ஆவது கிலோமீட்டரில் அவசர தடத்தில் நின்று கொண்டிருந்த பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் அதனை ஓட்டிச் சென்ற இளைஞர் மரணம் அடைந்தார். 38 வயதுடைய உள்நாட்டு ஆடவர் ஓட்டிச் சென்ற
அந்த பஸ் இயந்திரம் பழுதடைந்ததால் நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது பஸ்ஸிற்கு பின்னால் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் உள்நாட்டைச் சேர்ந்த 21 வயது இளைஞர் இறந்தார்.

பஸ் நிறுத்தப்பட்டிருந்ததை உணராமல் அதன் பின்புறப் பகுதியில் மோதியதால் தலையால் கடுமையாக காயம் அடைந்த அந்த இளைஞர் விபத்து நிகழ்ந்த இடத்திலேயே உயிரிழந்ததாக கூலாய் மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் Tan Seng Lee தெரிவித்தார். நேற்று பிற்பல் மணி 1.50 அளவில் நிகழ்ந்த இந்த விபத்து குறித்து 1987 ஆம் ஆண்டின் சாலை போக்குவரது சட்டத்தின் 41 ஆவது (1) பிரிவின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!