Latestமலேசியா

253 இந்தியக் குடும்பங்களுக்கு RM452,000 நிதியுதவி: மித்ராவின் ‘Sinar Cahaya’ திட்டம் தொடக்கம்

புத்ராஜெயா, ஏப்ரல்-19-மலேசிய இந்தியச் சமூகத்தின் நலிந்த பிரிவினருக்கு உதவும் நோக்கில், இந்தியச் சமூக உருமாற்றப் பிரிவான மித்ரா, மொத்தம் 452,000 ரிங்கிட் நிதியுதவியை அறிவித்துள்ளது.

​மித்ராவின் ‘Bantuan Sinar Cahaya’ திட்டத்தின் கீழ், மொத்தம் 253 தகுதியுடைய பயனர்கள் இந்த நிதியுதவியைப் பெறவுள்ளனர்.

இதற்கான அதிகாரப்பூர்வ அங்கீகாரம் 11-ஆவது தொழில்நுட்பக் குழுக் கூட்டத்தில் வழங்கப்பட்டதாக, மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

​நிதியுதவியின் முக்கிய விவரங்கள்…

நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட 57 பேருக்கு தலா 3,000 ரிங்கிட் வழங்கப்படுகிறது.

126 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா 1,500 ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

​48 தாய்மார்களுக்குப் பிரசவ கால உதவித்தொகையாக தலா 1,000 ரிங்கிட்டும், குடும்பத் தலைவரை இழந்த 22 குடும்பங்களுக்கு இறுதிச் சடங்கு செலவுகளுக்காக தலா 2,000 ரிங்கிட்டும் வழங்கப்படுகிறது.

​தேசிய நல வாரியத்துடன் (YKN) இணைந்து செயல்படுத்தப்படும் இந்நிதி, வரும் ஏப்ரல் 21-ஆம் தேதி முதல் நேரடியாகப் பயனர்களின் வங்கிக் கணக்குகளில் போடப்படும்.

தகுதிப் பெற்றவர்களின் பட்டியல் உட்பட ​மேல் தகவல்களை மித்ராவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் அல்லது அவர்களின் தொலைப்பேசி, மின்னஞ்சல் வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!