Latestமலேசியா

243 பயணிகளுடன் சென்ற இந்தோனேசியப் பயணிகள் படகு மாயம்; ஜாவா கடலில் தீவிர மீட்புப் பணி

ஜகார்த்தா, செப்டம்பர்-13,243 பயணிகளுடன் சென்ற இந்தோனேசியப் ஃபெரி படகு ஒன்று ஜாவா கடலில் மாயமாகியுள்ளதாகக் கடல்சார் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கப்பலுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதை அடுத்து, இந்தோனேசியாவின் தேசியத் தேடுதல் மற்றும் மீட்பு நிறுவனமான Basarnas மீட்புக் கப்பல்கள் மற்றும் விமானங்களைப் பயன்படுத்திப் பரந்த அளவிலான தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளது.

மோசமான வானிலை மற்றும் கடல் அலைகளின் சீற்றம் காரணமாகவே கப்பலுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதாக நம்பப்படுவதால், அதன் இருப்பிடத்தைக் கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

கடைசியாகப் பதிவு செய்யப்பட்ட கப்பலின் இருப்பிடத்தை நோக்கி மீட்புக் குழுவினர் விரைந்து சென்று பயணிகளையும் ஊழியர்களையும் மீட்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

துறைமுகத்தில் கூடியுள்ள பயணிகளின் உறவினர்கள் பதற்றத்துடன் தகவல்களுக்காகக் காத்திருக்கும் வேளையில், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!