
கோலாலம்பூர், செப்டம்பர்-19-நாட்டில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக 12,575 நோயாளிகள் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர்.
கடந்த ஜூலை மாதம் வரையிலான நிலவரப்படி, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கே அதிகபட்சமாக 12, 228 பெரியவர்களும், 307 சிறுவர்களும் காத்திருப்பதாகத் தேசிய உறுப்பு மாற்று மையம் NTC தெரிவித்துள்ளது.
தேசிய சிறுநீரகப் பதிவகத்தின் தரவுகளின்படி, சிறுநீரகம் பெறுவதற்கான காத்திருப்பு காலம் 5 முதல் 23 ஆண்டுகள் வரை நீடிக்கலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
இது தவிர, கல்லீரலுக்காக 16 பேரும், இதயத்திற்காக 14 பேரும் நுரையீரலுக்காக 3 பேரும் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர்.
இதே காலக்கட்டத்தில், நன்கொடையாளர்களிடமிருந்து 235 உறுப்புகளும் திசுக்களும் மட்டுமே பெறப்பட்டுள்ளன; இதில் அதிகபட்சமாக 126 கண் விழிப்படலங்களும், 58 சிறுநீரகங்களும் அடங்கும்.
இவ்வேளையில், நாடு முழுவதும் இதுவரை 436,542 பேர் தங்களது உடல் உறுப்புகளைத் தானம் செய்ய உறுதிமொழி எடுத்துள்ளதாக NTC கூறியது.



