Latestமலேசியா

Dumbbell மூலம் அடிக்கப்பட்டு மனைவி மரணம்; கணவர் கைது

ஷா அலாம், டிச 16- ஷா அலாம் ,ஜலான் சுங்கை சங்கக்க்கில் உள்ள வீட்டில் பொறாமையால் தனது மனைவியை கைவிரல்களை வலுப்படுத்த பயிற்சிபெறும் Dumbbell சாதனம் மூலம் அடித்துக்  கொன்றதாகக் கூறப்படும் கணவரை போலீசார் கைது செய்தனர் . விடியற்காலை மணி 5.33 அளவில் சந்தேகப் பேர்வழியிடமிருந்து புகார் கிடைத்ததைத் தொடர்ந்து அந்நபர் கைது செய்யப்பட்டதாக ஷா அலாம் OCPD துணை கமிஷனர் மோஹட் இக்பால் தெரிவித்தார். தமது மனைவிக்கு வலிப்பு இருப்பதாகவும் சுயநினைவற்ற நிலையில் இருந்ததால் அவரை ஷா ஆலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும் அந்த 38 வயதுடைய ஆடவர் கூறியதாக மோஹட் இக்பால் கூறினார்.

மருத்துவரின் பரிசோதனையில் 33 வயதுடைய பெண்ணின் உடலின் பல பாகங்களில் காயங்கள் காணப்பட்டதோடு பொறாமையின் காரணமாக சரவா கல்லூரியில் கல்வியாளராக பணிபுரியும் அப்பெண்ணை அவரது கணவர் தாக்கியிருப்பது தொடக்கக்கட்ட விசாரணை மூலம் தெரியவந்திருப்பதாக அவர் கூறினார். ஷா ஆலம் மருத்துவமனையில் அந்த நபரை போலீசார் கைது செய்தனர். மேலும் அந்த ஆடவர் தமது மனைவியை தாக்கியதற்கு பயன்படுத்தியதாக நம்பப்படும் Dumbbell லும் பறிமுதல் செய்யப்பட்டதாக மோஹட் இக்பால் கூறினார். இவ்வாண்டு ஏப்ரல் மாதம் அந்த தம்பதியர் திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்டது, குடும்ப உறுப்பினரின் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக அந்த பெண் சரவாக்கிலிருந்து இங்கு வந்ததாக மோஹட் இக்பால் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!