
கோலாலம்பூர், மே-9 – LRT இரயிலில் அமெரிக்கப் பெண்ணுடன் தனது உடலை உரசியக் குற்றத்திற்காக, வங்காளதேசியான தனியார் கல்லூரி மாணவனுக்கு 5,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
28 வயது Rahman Md Moshiur, கோலாலம்பூர் மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக் கொண்டான்.
ஜனவரி 9-ஆம் தேதி காலை 9 மணிக்கு யுனிவெர்சிட்டி LRT நிலையத்திலிருந்து பங்சார் LRT நிலையம் வரையிலான பயணத்தின் போது, 26 வயது உடற்கூறு நிபுணரான பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாக அவன் குற்றம் சாட்டப்பட்டிருந்தான்.
அக்குற்றத்திற்கு, குற்றவியல் சட்டத்தின் கீழ், அதிகபட்சம் 10 ஆண்டுகள் சிறையுடன், அபராதம் அல்லது பிரம்படி விதிக்க முடியும்.
எனினும், தன் செயலுக்காக வருந்துவதாகவும், இனியொரு முறை அத்தவற்றை செய்ய மாட்டேன் என்றும் அவன் நீதிமன்றத்திடம் முறையிட்டான்.
கடைசியில் 5,000 ரிங்கிட் அபராதம், தவறினால் 2 மாதங்கள் சிறைத் தண்டனை என மாஜிஸ்திரேட் எஸ்.மகேஸ்வரி தீர்ப்பளித்தார்