கோலாலம்பூர், மார்ச் 20 – 700 ரிங்கிட் சிறப்பு நிதியுதவி வழங்கப்படுவது தொடர்பில், வைரலாகி இருக்கும் “போஸ்டர்” போலியானது என்பதை, பொதுச் சேவைத் துறை உறுதிப்படுத்தியுள்ளது.
அந்த போஸ்டரில் இடம் பெற்றுள்ள தகவல்கள் அனைத்தும் தவறானது.
உண்மையில், 2022-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட போஸ்டர் ஒன்று மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக, பொதுச் சேவைத் துறை தமது முகநூல் பதிவு வாயிலாக தெரிவித்துள்ளது.
அதோடு, வைரலாகி இருக்கும் போலி போஸ்டரையும் அது தனது பதிவில் இணைத்துள்ளது.
அந்த போஸ்டர், 2022-ஆம் ஆண்டு, பொதுச் சேவை துறையின், வர்த்தக தொடர்பு பிரிவால் வடிவமைக்கப்பட்டது என்பதும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏப்ரல் ஐந்தாம் தேதி தொடங்கி, சிறப்பு நிதி உதவி வழங்கப்படுமென என அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.