Latestமலேசியா

RM700 சிறப்பு நிதியுதவி வழங்கப்படுவதாக வைரலாகி இருக்கும் ‘போஸ்டர்’ போலியானது ; கூறுகிறது பொதுச் சேவைத் துறை

கோலாலம்பூர், மார்ச் 20 – 700 ரிங்கிட் சிறப்பு நிதியுதவி வழங்கப்படுவது தொடர்பில், வைரலாகி இருக்கும் “போஸ்டர்” போலியானது என்பதை, பொதுச் சேவைத் துறை உறுதிப்படுத்தியுள்ளது.

அந்த போஸ்டரில் இடம் பெற்றுள்ள தகவல்கள் அனைத்தும் தவறானது.

உண்மையில், 2022-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட போஸ்டர் ஒன்று மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக, பொதுச் சேவைத் துறை தமது முகநூல் பதிவு வாயிலாக தெரிவித்துள்ளது.

அதோடு, வைரலாகி இருக்கும் போலி போஸ்டரையும் அது தனது பதிவில் இணைத்துள்ளது.

அந்த போஸ்டர், 2022-ஆம் ஆண்டு, பொதுச் சேவை துறையின், வர்த்தக தொடர்பு பிரிவால் வடிவமைக்கப்பட்டது என்பதும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏப்ரல் ஐந்தாம் தேதி தொடங்கி, சிறப்பு நிதி உதவி வழங்கப்படுமென என அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!