இங்கிலாந்து, மார்ச் 20 – இங்கிலாந்து நாட்டில் sofa பஞ்சை உண்ணும் விநோத நோயால் மகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தாயார் ஒருவர் கண்ணீர்மல்க தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தின் வேல்ஸ் பகுதியில் 3 வயதாகும் வைன்டர் என்ற அந்த சிறுமி தனது வீட்டின் sofa-வில் உள்ள பஞ்சு, சுண்ணாம்பு, கம்பளி உள்ளிட்டவற்றை உண்ணும் விநோத நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.
ஏற்கனவே ஆட்டிசம் குறைபாடு உள்ள வைன்டர், Pica என்ற அரிய வகை நோயாலும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இது உணவு அல்லாத மற்ற பொருட்களை சாப்பிட தூண்டும் ஒரு விதமான குறைபாடாகும்.
உலகில் இருக்கும் பலருக்கும் பலவிதமான நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், ஒன்றும் அறியாத இந்த சிறுமி இப்படி ஒரு நோயால் பாதிக்கப்பட்டிருப்பது அவரது குடும்பத்தை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.