
கோலாலம்பூர், மே 15 -கல்வி சீர்த்திருத்ததில் ஆசியர்கள் அளப்பரிய மற்றும் தியாக மனப்பான்மையோடு பங்காற்றி வருவது பாராட்டக்கூடியதாக இருப்பதாக ம.இ.காவின் தேசிய தலைவர் டான்ஸ்ரீ S.Aவின்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மாமனிதர்களை உருவாக்கும் மகத்தான பணியில் ஈடுபடும் ஆசிரியர்களின் சேவை போற்றக்கூடியதாக இருப்பதால் இந்த வேளையில் அவர்கள் அனைவருக்கும் தமது ஆசிரியர் தின வாழ்துக்களை அவர் தெரிவித்துக் கொண்டார்.
இளம் தலைமுறையை ஊக்குவித்து சிறந்த தேசத்தை ஆசிரியர்களே கட்டமைக்கின்றனர்.
ஆசிரியர் தினத்தில் மட்டுமின்றி எல்லா நாளும் நாம் ஆசிரியர்களுக்கு மரியாதை மற்றும் நன்றியை தெரிவிக்கும் கடப்பாட்டை கொண்டிருக்க வேண்டுமென விக்னேஸ்வரன் வலியுறுத்தினார்.
ஆசிரியர்கள் கற்றல் கற்பித்தல் நடவடிக்கையில் அற்புதமான சேவையை ஆற்றிவருவதோடு மாணவர்கள் தங்கு தடையின்றி தரமான கல்வியையை பெறுவதற்கும்,அவர்கள் கட்டொழுங்கு மற்றும் பொறுப்புள்ள பிரஜைகளாக உருவாக்குவதற்கும் சமூக கடப்பாட்டுடன் உழைத்து வருகின்றனர்.
அவ்வப்போது நிகழும் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப தங்களை மேம்படுத்திக் கொண்டு கல்வியில் மட்டுமின்றி புறப்பாடங்களிலும் மாணவர்களை சிறந்தவர்களாக உருவாக்கும் பணியை திறம்படச் செய்ய வேண்டும்.
அந்த அடிப்படையில் Guru Pemacu Reformasi Pendidikan எனும் கருப்பொருளுக்கு ஏற்ப கல்வி சீர்திருத்தத்திற்கு ஆசிரியர்கள் தியாக மனப்பான்மையோடு ஒரு வாகனம் போல் செயல்பட வேண்டும் என வலியுறுத்துவது பொருத்தமான ஒன்றாகும் என விக்னேஸ்வரன் கேட்டுக் கொண்டார்.