
ஜாசின், அக்டோபர் -15 ,
நேற்று மாலை டுரியான் துங்கால் தாமான் செம்பாக்கா 2 பகுதியில், மனைவி துரோகம் செய்தார் என சந்தேகித்த வங்காளதேச ஆடவர் ஒருவர் தனது வீட்டுத் தோழரைக் கொடூரமாக குத்திக் கொன்று பின்னர் தானும் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
31 மற்றும் 42 வயதுடைய அவ்விருவரும் வங்காளதேசத்தைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளர்கள் என்றும் அவர்கள் இருவரும் நண்பர்கள் என்றும் மலாக்கா காவல்த்துறை தலைவர் டத்தோ ஸுல்கைரி முக்தார் (Datuk Dzulkhairi Mukhtar) தெரிவித்தார்.
சமையலறையில் ஒருவர் ரத்த வெள்ளத்தில் கிடந்த நிலையில் மற்றொருவர் அறைக்குள் தொங்கியபடி இருந்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
தற்கொலை செய்த நபர் இந்தோனேசிய பெண்ணை திருமணம் செய்திருந்தார். அப்பெண் தனது குழந்தையை அழைத்து கொண்டு இரண்டு வாரங்களுக்கு முன்பு வீட்டை விட்டு ஓடி விட்டார் என்றும் இதனால் அந்த ஆடவருக்கு தனது மனைவி கள்ள உறவில் ஈடுபட்டிருப்பாரோ என்று சந்தேகம் எழுந்ததாக போலீஸ் தெரிவித்துள்ளது.
சம்பஹ்வ இடத்தில் போலீசார் கத்திகளை பறிமுதல் செய்ததோடு விசாரணை நடத்தி தொடர்ந்து இந்த வழக்கை குற்றச் சட்டத்தின் கீழ் பதிவுச் செய்து விசாரித்து வருகின்றனர்.



