
கோலாலம்பூர், ஜூன் 11 – ஒரு காருக்கும் டிரெய்லருக்கும் இடையில் ஆபத்தான முறையில் விபத்து ஏற்படக்கூடிய சூழ்நிலை தவிர்ப்பதைக் கொண்ட காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. வடக்கு – தெற்கு நெடுஞ்சாலையில் தாப்பாவில் வெளியேறும் பகுதிக்கு அருகே டெஸ்காமில் பதிவான ஒரு நிமிட காணொளி இதுவாகும் என நம்பப்படுகிறது. எதிரே வந்த வாகனத்துடன் மோதுவதை தவிர்ப்பதற்காக நெடுஞ்சாலையில் அந்த டிரெய்லர் வேகமாக செல்வதை அந்த காணொளியில் பார்க்க முடிகிறது.
அந்த டிரெய்லர் காரில் மோதுவதிலிருந்து மயிரிழையில் சாலையின் வலது புறம் நின்று பின்னர் அதன் பயணத்தை தொடர்கிறது. அதே நேரத்தில் கார் அவசர பாதையை நோக்கி சற்றுத் திரும்புகிறது. எனினும் இந்த சமபவத்தில் எந்த வாகனங்களும் விபத்தில் சிக்கவில்லை.