ஷா அலாம், நவ 2 – சிலாங்கூரில் நேற்று மாலை பல இடங்களில் பெய்த கடுமையான மழையின்போது மரங்கள் விழுந்ததில் 5 கார்கள் சேதம் அடைந்தன. கோத்தா டமன்சாரா ஜாலான் PJU 5/15 இல் ஒரு மரம் விழுந்ததில் ஐந்து கார்கள் சேதம் அடைந்தன. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தீயணைப்பு வீரர்கள் அனுப்பிவைக்கப்பட்டதாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் துணை இயக்குனர் அஹ்மாட் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார். பண்டார் ஸ்ரீ டமன்சாராவில் பெர்சியாரான் மெரான்தி வட்டாரத்தில் ஏழு மரங்கள் விழுந்ததில் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பண்டார் நுசா ருவில் ஜாலான் புலாவ் அங்சாவிலும் இரண்டு மரங்கள் விழுந்ததில் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.இதனிடையே நேற்று மாலை பெய்த கடுமையான மழையைத் தொடர்ந்து தூய்மைப்படுத்தும் பணிகளுக்காக ஷா அலாமில் உள்ள தேசிய தாவரயியல் பூங்கா இன்று மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தெரிவித்துள்ளன.