மாஸ்கோ, டிச 1 – ரஷ்ய பெண்கள் முடிந்தவரை அதிகமான குழந்தைகளை பெற்றுக்கொள்ளும்படியும் முடிந்தால் எட்டு குழந்தைகள் அல்லது அதற்கும் மேல் பெற்றுக்கொள்ளும்படி அந்நாட்டின் அதிபர் அதிபர் விளாடிமிர் புதின் கேட்டுக் கொண்டுள்ளார். மாஸ்கோவில் உலக ரஷ்ய மக்கள் மன்றத்தின் கூட்டத்தில் உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்தார். 1990ஆம் ஆண்டுகளுக்கு பின் ரஷ்யாவின் பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது.
கடந்த ஆண்டு உக்ரைன் போர் தொடங்கியது முதல் 300,000 த்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். அடுத்த பல பத்தாண்டுகளுக்கு ரஷ்யாவின் மக்கள் தொகையை அதிகரிப்பதுதான் நமது இலக்காக இருக்க வேண்டும் என புதின் கூறினார். ரஷ்ய குடும்பகளில் நமது பாட்டிகள் மற்றும் அதற்கு முந்தைய அவர்களது தலைமுறையினர் ஏழு, எட்டு மற்றும் அதற்கும் கூடுதல் எண்ணிக்கையிலான குழந்தைகளை பெற்றுக் கொண்டனர் . இந்த பாரம்பரியத்தை ரஷ்ய பெண்கள் தொடர வேண்டும் என புதின் கேட்டுக்கொண்டார்.