Latestமலேசியா

கோலாலம்பூரில் பைடூரி அடுக்ககங்களில் 560 சட்டவிரோத குடியேறிகள் கைது

கோலாலம்பூர், ஜன 20 – பெரெனாங் பண்டார் தாசிக் கேசுமாவிலுள்ள பைடூரி அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் ஆவணங்கள் இல்லாத வெளிநாட்டினரை குடிநுழைவுத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இந்தியா, இலங்கை, வங்காளதேசம், மியன்மார், நேப்பாளம், பாகிஸ்தான், இந்தோனேசியா, கம்போடியா, சியாராலோன் , கெமரூன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சட்டவிரோத குடியேறிகள் ஒருங்கிணைந்த நடவடிக்கையின் மூலம் கைது செய்யப்பட்டனர்.

நேற்றிரவு 11 மணியளவில் மேற்கொள்ளபட்ட இந்த நடடிக்கையின்போது 751 வெளிநாட்டினர்களிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக குடிநுழைவுத்துறையின் தலைமை இயக்குனர் டத்தோ ருஸ்லின் ஜூசோ தெரிவித்தார். சில வெளிநாட்டினர் தப்பியோட முயன்றபோதிலும் அவர்களது முயற்சி முறியடிக்கப்பட்டது. பைடூரி அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் தங்கியிருந்த மக்களில் 80 விழுக்காட்டினர் வெளிநாட்டினர் என ருஸ்லின் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!