Latestமலேசியா

MSSM குறுக்கோட்டப் போட்டியில் சிலாங்கூரின் திரிஷிதா தங்கம் வென்றார்

கோலாலம்பூர், மே 19 – மலாக்கா , ஜாசினிலுள்ள மாரா தொழிற்நுட்ப பல்கைலைக்கழகத்தில் நடைபெற்ற MSSM எனப்படும் மலேசிய பள்ளிகளுக்கான விளையாட்டு மன்றத்தின் தேசிய நிலையிலான குறுக்கோட்டப் போட்டியில் 12 வயதுக்கு கீழ்ப்பட்ட மாணவிகள் பிரிவில் சிலாங்கூரின் திரிஷிதா யோகேஸ்வரன் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். நாடு முழுவதிலும் சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்ட அந்த போட்டியில் அவர் தங்கப் பதக்கம் வென்று சிலாங்கூர் மாநிலத்திற்கு பெருமை சேர்த்தார்.

Bandar Puncak Alam மைச் சேர்ந்த திரிஷிதா 4 கிலோமீட்டர் தூரத்தைக் கொண்ட இந்த குறுக்கோட்டப் போட்டியை 15 நிமிடம் 12 வினாடிகளில் முடித்து வெற்றி பெற்றதன் மூலம் தாம் பயின்றுவரும் சவ்ஜானா உத்தாரா ஸ்ரீ பிரிஸ்டினா தேசிய பள்ளிக்கும் பெருமையை தேடித்தந்துள்ளார். அடுத்த ஆண்டு MSSM போட்டியிலும் வெற்றி பெற்று மலேசியாக்கு தேர்வு பெறவேண்டும் என்பதே தனது இலக்கு என்று அவர் கூறினார். இதனிடையே எதிர்வரும் ஜாலை மாதம் நடைபெற்ற மாவட்ட நிலையிலான மற்றும் ஜூலை மாதம் நடைபெறவிருக்கும் மாநில நிலையிலான ஓட்டப்பந்த போட்டியில் 1,200 மீட்டர் ஓட்டத்தில் கலந்துகொள்ளவிருக்கும் திரிஷிதா அப்போட்டிக்கு தயாராகும் முயற்சியில் ஈடுபட்டுவருவதாக அவரது தந்தை யோகேஸ்வரன் தெரிவித்தார். இருவர் கொண்ட குடும்பத்தில் இளையவரான திரிஷிதா தொடர்ந்து ஓட்டப்பந்தய போட்டிகளில் சாதனை படைத்து தனது பெற்றோர் யோகேஸ்வரன் – ஜீவராணி தம்பதியருக்கும் சிலாங்கூர் மாநிலத்திற்கும் பெருமை சேர்க்க பாடுபடுவேன் என உறுதிபூண்டுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!