சீனா, ஜன 12 – சொந்த வீடு கட்டி நிம்மதியாக வாழ வேண்டும் என்பதே பலரின் கனவாக இருக்கும். அனால், இங்கு ஒரு குடும்பம் வசதி இருந்தும் ஹொட்டலில் வாடைக்குப் பணம் கொடுத்து வசித்து வருகின்றனர்.
சீனாவை சேர்ந்த ஒரு குடும்பம், வீடுகட்டி வாழ்வதற்கு நிதி வசதி இருந்தும் ஒரு நாளுக்கு 1,000 யுவான் அதாவது RM 654 ரிங்கிட் வாடகை கொடுத்து நான்யாங் நகரில் உள்ள ஹொட்டலில் வசித்து வருகின்றனர்.
இவர்களது குடும்பத்தில் மொத்தம் 8 பேர் உள்ளனர். ஹொட்டல் வாடகை அதிகமாக இருந்தாலும் இவர்களுக்கு இது பெரிதாக தெரியவில்லையாம். மின்சாரம், தண்ணீர்,பார்க்கிங்கிற்கு கூட கூடுதல் கட்டணம் கிடையாதாம்.
“இன்று நாங்கள் ஹொட்டலில் குடியேறி 229-வது நாள் ஆகிவிட்டது. எங்கள் குடும்பம் மகிழ்ச்சியுடன் இருப்பதாகவும், வாழ்நாள் முழுவதும் இங்கேயே வாழ திட்டமிட்டு உள்ளோம் என்றும்” அந்த குடும்பத்தை சேர்ந்த மு என்பவர் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல், இந்த வாழ்க்கை முறை பணத்தை சேமிக்க உதவுவதாகவும் கூறியுள்ளார். இதனிடையே நீண்ட காலம் தங்குவதற்கு ஹொட்டல் நிர்வாகம் பல சிறப்பு சலுகைகளை அளித்துள்ளதாம்.
தற்போது, இவர்களது வீடியோக்கள் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. வீடியோவைப் பார்த்தவர்களில் பலர், இந்த வாழ்க்கை முறைக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்தாலும், சிலர் கேலியும் செய்துள்ளனர்.