கோலாக் கிராய், டிச 18- கிளந்தானில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தில் குவாலா கிராய்யில் 25 மீட்டர் தூர பாலம் இடிந்ததால் 500க்கும் மேற்பட்ட கிராவாசிகள் பாதிப்புக்கு உள்ளாகினர்.
செனுலாங்கிற்கு அருகே பாசிர் ஜெரிங், டுசுன் புனட் மற்றும் பத்து பாகார் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அங்கிருந்து வெளியேற்க முடியாத சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
நேற்று நண்பகல் ஒரு மணியளவில் வெள்ள நீர் வடியத் தொடங்கியபோது தான் இச்சம்பவத்தை அறிந்ததாக கம்பூங் பாசிர் ஜெரிங்கை சேர்ந்த குடியிருப்புவாசிகள் தெரிவித்துள்ளனர்.
2014ஆம் ஆண்டு பெரிய அளவில் வெள்ளம் ஏற்பட்ட போதிலும் அப்பாலத்திற்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. தினசரி பொருட்களை வாங்குவதற்கு அந்த பாலத்தை கடந்துதான் கிராமத்திலிருந்து செல்ல வேண்டும் என்கின்ற நிலையில் தற்காலிகமாக பாலத்தை விரைந்து நிர்மாணிக்க வேண்டும் என கிராமவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.