கோலாலம்பூர், மார்ச் 16 – இன்று விடியற்காலையில் டமன்சரா உத்தமாவிலுள்ள வீடு தீக்கிரையானதில் ஒரு தம்பதியர் உயிரிழந்தனர்.
61 வயதுடைய காங் ட்சி யம் மற்றும் அவரது 56 வயதுடைய மனைவி லியோன் சின் முன் ஆகியோர் இந்த துயரச் சம்பவத்தில் மரணம் அடைந்தவர்கள் என அடையாளம் தெரிவிக்கப்பட்டது.
விடியற்காலை மணி 5.13 அளவில் 10 க்கும் மேற்பட்ட தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை வீரர்கள் சம்பவம் நிகழ்ந்த வீட்டிற்கு சென்றதாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் துணை இயக்குனர் அஹ்மத் முக்லிஸ் முக்தார் கூறினார்.
அந்த இரண்டு மாடி கொண்ட வீடு 70 விழுக்காடு எரிந்துவிட்டதோடு அவ்வீட்டிற்குள் 3 பேர் சிக்கிக் கொண்டனர்.
அந்த பேரிடரில் 14 வயது சிறுமியை வெற்றிகரமாக மீட்கப்பட்டபோதிலும் அச்சிறுமியின் பெற்றோர்கள் இறந்ததாக அஹ்மத் முக்லிஸ் முக்தார் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.