Latestமலேசியா

10 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் 5G ‘நெட்வொர்க்கை’ பயன்படுத்த தொடங்கியுள்ளனர் ; கூறுகிறார் பாஹ்மி

கோலாலம்பூர், பிப்ரவரி 22 – கடந்த மாதம் வரையிலான நிலவரப்படி, நாட்டிலுள்ள ஒரு கோடிக்கும் அதிகமான பயனர்கள் 5G இணையத் தொடர்பை பயன்படுத்த தொடங்கியுள்ளதாக, தகவல் தொடர்பு அமைச்சர் பாஹ்மி பட்சில் தெரிவித்தார்.

கடந்தாண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், அந்த எண்ணிக்கை 17.4 விழுக்காடு அதிகமாகும்.

5G சேவைக் கட்டணத்திற்கு தள்ளுபடி வழங்கி, அந்த சேவையை மேலும் அதிகமானோர் பயன்படுத்த வழிவகுத்த உள்ளூர் தொலைத்தொடர்பு நிறுவனங்களையும் பாஹ்மி பாராட்டினார்.

5G சேவைக்கு மாறும் சந்தாதாரர்களுக்கு கூடுதல் கட்டணம் எதையும், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் விதிக்காது என கடந்த மாதம் பாஹ்மி அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!