பெட்டாலிங் ஜெயா, பிப்ரவரி 13 – மூச்சுத் திணறலுக்கு இலக்கான பெண் இருந்த வாகனத்தை, “எஸ்கார்ட்” செய்து பாதுகாப்பாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல உதவிய போலீஸ் அதிகாரிகள் சிலரின் செயலை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
அச்சம்பவத்தை, பாதிக்கப்பட்ட பெண் தனது சித்தி நூர்ஹனிசான் எனும் முகநூல் கணக்கில் பதிவேற்றம் செய்துள்ளார்.
அவரும் அவரது குடும்பத்தாரும், சிங்கப்பூருக்கு விடுமுறைக்கு சென்றுக் கொண்டிருந்த போது அச்சம்பவம் நிகழ்ந்ததாகவும் பதிவிட்ட அவர், போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் தவித்த தனக்கும் தனது கணவருக்கும், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் அதிகாரி ஒருவர் உதவிக்கரம் நீட்டியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அப்பெண்ணின் கணவர், பணியில் போலீஸ் அதிகாரியிடம் ஓடிச் சென்று உதவிக் கோரும் காட்சியை, சம்பவத்தின் போது அவர்களுடன் இருந்த அவர்களின் உறவினர் ஒருவர் பதிவுச் செய்ததாகவும் அப்பெண் கூறியுள்ளார்.
அப்பெண்ணின் பதிவின் கீழ் பலர், “இதுபோன்ற நல்ல அதிகாரிகளை பாராட்டுவதும், வாழ்த்துவதும் தகும்” என தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.