கோலாலம்பூர், ஜனவரி 11 – ஜாலான் ஜெலி – குவா முசாங் சாலையில், இரு யானைகள் சண்டையிடுவது போன்ற காணொளி ஒன்று, சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
அந்த யானைகள், காட்டிலிருந்து வெளியே வந்து, சாலையை கடந்து செல்ல முற்பட்ட போது, அவற்றுக்குள் சண்டை மூண்டதாக நம்பப்படுகிறது.
அவ்வழியே சென்ற வாகனமோட்டிகள், அந்த யானைகளை கடந்து செல்ல துணிவின்றி நின்றதால், அங்கு வாகன நெரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அந்த நெரிசலில் சிக்கிய வாகனமோட்டி ஒருவர், யானைகள் சண்டையிட்டுக் கொள்ளும் காட்சியை பதிவுச் செய்து, பைஸ் முஹமட் பஸ்ரி எனும் முகநூல் கணக்கில் பதிவிட்டுள்ளார்.
கடந்த மாதம் இறுதியில் பதிவிடப்பட்ட அந்த காணொளி, ஆயிரத்துக்கும் அதிகமான முறை பகிரப்பட்டு வைரலாகியுள்ளது.
இதனிடையே, இரவில் யானைகளை எதிர்கொள்ள நேர்ந்தால், விளக்குகளை ஒளிரச் செய்யவோ, “ஹாரன்களை” ஒலிக்கவோ வேண்டாம் என, அந்த பதிவுக்கு கீழ் இணையப் பயனர் ஒருவர் பதிவிட்டுள்ளார்.