கோலாலம்பூர், டிச 23 – ஜோகூர் மாநிலத்தின் புதிய போலிஸ் படைத் தலைவராக DCP குமார் முத்துவேலு நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போதைய ஜோகூர் மாநில போலிஸ் படைத் தலைவராக இருக்கும் டத்தோ கமாருல் ஜமான் மாமாட் அடுத்தாண்டு ஜனவரி 28ஆம் திகதி பதவி ஓய்வுப் பெறுவதால், அவருக்கு பதிலாக குமார் அப்பதவியை ஏற்கின்றார்.
குமார் முத்துவேலு போலிஸ் கமிஷனராகவும் பதவி உயர்வு பெற்றுள்ளார்.
அவர் இதற்கு முன்பு அம்மாநிலத்தின் போலிஸ் துணை தலைவர் பதவியில் இருந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய போலிஸ் படை, ஒரு போலிஸ் கமிஷனர் பதவி, 6 துணை போலிஸ் கமிஷனர் பதவி உட்பட மொத்தம் 42 அதிகாரிகளுக்கான பதவி உயர்வு நியமனத்தை அறிவித்தது.
இவர்களின் பதவி உயர்வு நியமனம் ஜனவரி 23 முதல் அமலுக்கு வருகிறது.