Latestமலேசியா

பேங்க் நெகாரா OPR-யை 3% விழுக்காட்டில் நிலை நிறுத்தும்

கோலாலம்பூர், மார்ச் 7 – நாட்டின் OPR வட்டி விகிதத்தை 3 விழுக்காட்டில் நிலை நிறுத்தி உள்ளது பேங்க் நெகாரா. இதனை தொடந்து, இனி இது உயர்த்தப்படாது என்று உறுதியையும் அது வழங்கியுள்ளது.

பணவீக்கம், மிதமான வளர்ச்சிக்கு மத்தியில் பேங்க் நெகாரா OPR விகிதத்தை நிலை நிறுத்தலாம் என்று Standard Chartered Global Research கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் ஒவ்வொரு நிதிக் கொள்கைக் குழுக் கூட்டத்திலும் பேங்க் நெகாரா OPR-யை 3% விழுக்காட்டில் நிலை நிறுத்தியிருக்கிறது.

பேங்க் நெகாரா ஆகக் கடைசியாக கடந்த ஆண்டு மே மாதம் OPR-யை 2.75% லிருந்து 3% ஆக உயர்த்தியது.

பொருளாதாரம், நிலையான பணவீக்கத்தை நிர்வகிக்க வேண்டியதன் அவசியத்தை காரணம் காட்டி இது உயர்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!