Latestமலேசியா

பினாங்கு பாலத்தில் ஆடவர் கடலில் தள்ளியதாக பெண் புகார்

ஜோர்ஜ் டவுன், ஜன 16 – தம்மை கொல்லும் முயற்சியோடு பினாங்கு பாலத்திலிருந்து ஆடவர் கடலில் தள்ளியதாக பெண் ஒருவர் தெரிவித்ததைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட ஆடவருக்கு எதிராக விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக பினாங்கு போலீஸ் தலைவர்
காவ் கோக் சின் தெரிவித்தார். நேற்றிரவு பினாங்கு பாலத்தில் 2.8 ஆவது கிலோமீட்டரில் நடைபெற்ற கடுமையான விவாதத்திற்குப் பின் 40 வயது பெண்ணும், 37 வயது ஆடவரும் கடலில் குதித்ததைத் தொடர்ந்து வழிபோக்கர் மற்றும் மீன்பிடி படகில் இருந்த மீனவர்களால் அவர்கள் காப்பாற்றப்பட்டனர். ஆனால் தமக்கு அறிமுகமான ஆடவரால் தாம் கடலில் தள்ளப்பட்டதாக அந்த பெண் கூறியிருப்பதால் இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக காவ் கோக் சின் கூறினார். மேலும் அந்த ஆடவர் மற்றொரு மாநிலத்தில் போலீஸ் அதிகாரியாக இருந்து வருவதாகவும் அப்பெண் கூறியுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!