கோலாலம்பூர், நவ 17 – 20 மீட்டர் உயரத்திலுள்ள கோபுரத்தின் மீது கிரேனில் சுயநினைவின்றி இருந்த அதன் ஓட்டுனர் இறந்தார் என உறுதிப்படுத்தப்பட்டது. தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினரின் உதவியோடு அவரது உடல் கீழே கொண்டு வரப்பட்டது. கே.எல்.சி.சிக்கு அருகேயுள்ள கட்டுமான வேலைகள் நடைபெறும் இடத்தில் இருந்த கிரேனுக்குள் 27 வயதுடைய அதன் ஓட்டுனர் சுயநினைவற்ற நிலையில் இருந்ததை தொடர்ந்து அங்கு வேலை செய்து வந்த இதர ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். நேற்றிரவு மணி 7.46 அளவில் அருகேயுள்ள மற்றொரு கோபுரத்தின் கிரேனை பயன்படுத்தி அவரது உடல் கீழே இறக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் கமாண்டர் மியோர் ஃபிக்ரி ஸைனி தெரிவித்தார். அந்த கிரேன் ஓட்டுனரின் உடலை பரிசோதித்த சுகாதார அமைச்சின் மருத்துவ அதிகாரி அவர் இறந்துவிட்டதை உறுதிப்படுத்தியதாக டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் நூர் டெல்ஹான் யஹாயா தெரிவித்தார்.
Related Articles
இந்தியர்களுக்கான நிதி ஒதுக்கீட்டைக் கண்காணிக்க சிறப்பு செயற்குழுவா? அவசியமில்லை ! – டத்தோ ரமணன்
19 hours ago
பவள விழாவைக் கொண்டாடும் Bank Rakyat வீரியம் குறையாமல் சேவையைத் தொடர வேண்டும் – டத்தோ ரமணன் வலியுறுத்து
19 hours ago