Latestமலேசியா

மலாக்காவில் 3 ஆண் மாணவர்களுக்குப் பாலியல் தொல்லை: தாபிஸ் ஆசிரியருக்கு 11 ஆண்டுகள் சிறை, 12 பிரம்படிகள்

ஆயர் குரோ, ஆகஸ்ட்-18-மலாக்காவில் 3 ஆண் மாணவர்கள் மீது பாலியல் அத்துமீறல் புரிந்த குற்றத்தை ஒப்புக்கொண்ட 31 வயது தஹ்பிஸ் பள்ளி ஆசிரியருக்கு ஆயர் குரோ செஷன்ஸ் நீதிமன்றம் மொத்தம் 102 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 12 பிரம்படிகளும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

​Muhammad Aimanuddin Julaihi என்பவர் மீது சுமத்தப்பட்ட 10 குற்றச்சாட்டுகளையும் அவர் நீதிபதி முன்னிலையில் ஒப்புக்கொண்டார்.

​கடந்தாண்டு மே முதல் ஜூலை மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில், புக்கிட் ரம்பாயில் உள்ள சமயக் கல்வி மைய வளாகத்தில் 13, 14 மற்றும் 16 வயதுடைய மாணவர்களை, இவர் வலுக்கட்டாயமாக ஓரினப் புணர்ச்சிக்கு உட்படுத்தியுள்ளார்.

இதையடுத்து ​முதல் 8 குற்றச்சாட்டுகளுக்குத் தலா 10 ஆண்டுகள் சிறை மற்றும் ஒரு பிரம்படியும், மற்ற இரண்டு குற்றச்சாட்டுகளுக்குத் தலா 11 ஆண்டுகள் சிறை மற்றும் இரு பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.

எனினும், ​இத்தண்டனைகள் அனைத்தையும் ஏக நேரத்தில் அனுபவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டதால், அவர் அதிகபட்சமாக 11 ஆண்டுகள் மட்டும் சிறைத் தண்டனை அனுபவிப்பார்.

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!