
கோலாலம்பூர், ஜூன் 18 -சமூக ஊடகங்களில் அண்மையில் நடந்த விவாதங்களைத் தொடர்ந்து, வாகன ஜன்னல்களில் அகற்றக்கூடிய சூரிய மறைப்புகள் மற்றும் திரைச்சீலைகளைப் பயன்படுத்துவது குறித்த பொதுவான குழப்பம் மீண்டும் எழுந்துள்ளது.
சில குறிப்பிட்ட நிறமூட்டப்பட்ட ஜன்னல்கள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுபோன்ற துணைக்கருவிகள் ஏன் தடை செய்யப்பட்டுள்ளன என்று பல வாகன ஓட்டிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மலேசிய சாலைப் போக்குவரத்து விதிமுறைகளின்படி, ஒரு வாகனம் இயங்கிக் கொண்டிருக்கும்போது அகற்றக்கூடிய சூரிய மறைப்புகள், திரைச்சீலைகள் அல்லது பிற ஜன்னல் உறைகளைப் பயன்படுத்துவது ஒரு குற்றமாகும்.
இத்தகைய தடைகள் பார்வைப் புலப் பகுதிகளை உருவாக்கலாம், ஓட்டுநரின் பார்வைப் புலத்தைக் குறைக்கலாம் மற்றும் சாலைப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையலாம் என்று ஜே.பி.ஜே எனப்படும் சாலை போக்குவரத்துத்துறை முன்பு விளக்கியுள்ளது.
அதோடு அமலாக்க அதிகாரிகள் வாகனத்தின் உள்ளே பார்ப்பதையும் அவை தடுக்கக்கூடும்.
அதே வேனையில் பின்புறப் பயணிகளின் ஜன்னல்களில் அடர் நிறக் கண்ணாடிப் பூச்சுக்குத் தற்போதைய விதிமுறைகள் அனுமதிப்பதால், இந்த விவகாரம் குறித்து வாகன ஓட்டிகள் தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.



