Latestமலேசியா

கத்தியை பயன்படுத்தி 50 ரிங்கிட் கொள்ளை; ஆடவருக்கு 6 ஆண்டுகள் சிறை ஒரு பிரம்படி

கோலாலம்பூர், டிச 11 – ஜிஞ்ஜாங் எம்.ஆர்.டி (MRT) நிலையத்தில் மோட்டார் சைக்கிள்களை நிறுத்திவைக்கும் இடத்தில் கத்தியால் மிரட்டி ஒரு நபரிடம் 50 ரிங்கிட் கொள்ளையிட்ட குற்றத்தை ஒப்புக்கொண்ட 49 வயது எம்.கிருஷ்ணமூர்த்தி என்ற ஆடவருக்கு செஷன்ஸ் நீதிமன்றத்தில் 6 ஆண்டுகள் சிறை தண்டனையும் ஒரு பிரம்படியும் விதிக்கப்பட்டது. இம்மாதம் 7ஆம் தேதி காலை மணி 11.55 அளவில் இக்குற்றத்தை புரிந்ததை கிருஷ்ணமூர்த்தி ஒப்புக்கொண்டதோடு மீண்டும் இதுபோன்ற தவறை செய்யமாட்டேன் என்று கூறியதோடு தமக்கு குறைந்த தண்டனையை விதிக்கும்படி நீதிபதியிடம் முறையிட்டார்.

அவரது கோரிக்கையை பிராசிகியூசன் அதிகாரி இலியா சியாஹீடா முகமட் ரசிஃப் நிராகரிக்கும்படி கேட்டுக்கொண்டதோடு குற்றஞ்சாட்டப்பட்ட நபர் கத்தியை பயன்படுத்தி கொள்ளயிட்டுள்ளதால் அவருக்கு கடுமையான தண்டனை விதிக்கும்படி நீதிபதியிடம் வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட டிசம்பர் 7ஆம் நாளில் இருந்து ஒரு ஆண்டு சிறைத் தண்டனையை கிருஷ்ணமூர்த்தி அனுபவிக்க வேண்டும் என்பதோடு ஒரு பிரம்படியும் விதிப்பதாக செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி நோரினா ஸைனோல் அபிடின் உத்தரவிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!