புதுடில்லி , பிப் 16 – இந்தியாவின் பிரபலமான சுற்றுலா மையமான தாஜ் மஹாலில் ஆறு பெண்களைக் கொண்ட மலேசிய சுற்றுப்பயணிகள் தேசிய கொடியை அசைத்ததற்காக எழுத்துப்பூர்வமான மன்னிப்பு கடிதம் கொடுக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர். வியாழக்கிழமை காலை சுமார் 8 மணியளவில் இந்தியர் ஒருவருடன் மலேசிய பெண் சுற்றுலாப் பயணிகள் தாஜ் மஹால் பகுதியில் நுழைந்தனர். பின்னர், இந்த பெண்கள் தங்கள் தேசியக் கொடியை தாஜ் மஹால் சென்ட்ரல் டேங்க் அருகே உள்ள பாதையில் வைத்திருப்பதைக் காணும் வீடியோ வைரலாகியதாக இந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்தது.
விதிமுறைகளை மீறி, பின்னர், விசாரிக்கப்பட்டபோது, அந்த மலேசிய சுற்றுப்பயணிகள் இதுபோன்ற விஷயங்களுக்கு கட்டுப்பாடுகள் பற்றி தாங்கள் அறிந்திருக்கவில்லை என்பதை வெளிப்படுத்தியதோடு எழுத்துப்பூர்வ மன்னிப்பைச் சமர்ப்பித்த பிறகு அங்கிருந்து வெளியேறுவதற்கு அனுமதிக்கப்பட்டனர். தாஜ் மஹால் வளாகத்தில் விளம்பர, வணிக மற்றும் பிரச்சார நடவடிக்கைகளுக்கு கட்டுப்பாடு உள்ளது. உங்கள் நாட்டின் கொடியை அசைப்பது அனுமதிக்கப்படாத செயல்களில் ஒன்றாகும். அவர்கள் கொடியை பிடித்துக் கொண்டு புகைப்படம் எடுத்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில், தாஜ்மஹாலில் பிரச்சாரம் அல்லது விளம்பர நடவடிக்கைகளுக்கான கட்டுப்பாடுகள் பற்றி தங்களுக்குத் தெரியாது என்று கூறினர். அவர்கள் எழுத்துப்பூர்வ மன்னிப்பு கேட்டு செல்ல அனுமதிக்கப்பட்டனர். அவர்களுடன் வந்த இந்திய பிரஜையும் தாஜ் மஹாலின் விதிமுறைகள் குறித்து அறியாமையை வெளிப்படுத்தினர் என இந்திய தொல்லியல் துறையின் துணை அதிகாரி பிரின்ஸ் வாஜ்பாய் தெரிவித்தார்.