![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/06/MixCollage-10-Jun-2024-12-52-PM-1225.jpg)
ஜொகூர் பாரு, ஜூன்-10 தேசிய மற்றும் சிலாங்கூர் FC கால்பந்தாட்டக்காரர் ஃபைசால் ஹலிம் மீதான எரிதிராவகத் தாக்குதலுக்கு தாம் தான் பின்னணியில் இருந்து செயல்பட்டிருப்பதாகக் கூறப்படுவதை, JDT உரிமையாளர் துங்கு மக்கோத்தா துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
JDT ரசிகர்களுடனான Podcast உரையாடலின் போது TMJ அவ்வாறு சொன்னார்.
ஃபைசாலுக்கு நேர்ந்தது மிகவும் துரதிஷ்டவசமானது; அவர் எல்லாருடனும் இனிமையாகப் பழகக் கூடியவர்.
ஆனால், அச்சம்பவத்தில் தமது பெயர் சம்பந்தப்படுத்தப்படுவது ஏன் என்று தான் இன்று வரை தமக்கு விளங்கவில்லை என, இடைக்கால ஜொகூர் சுல்தானுமான அவர் கூறினார்.
சிலாங்கூர் அணிக்கு விளையாவதால் ஃபைசால் ஒன்றும் JDT-க்கு அச்சுறுத்தல் அல்ல.
அப்படியிருக்க அவரை ஏன் நான் குறி வைக்க வேண்டும்? அவர் கதையை முடிக்க வேண்டும் என துங்கு இஸ்மாயில் கேள்வி எழுப்பினார்.
ஜாகார்த்தாவில் சிலாங்கூர் FC பேருந்து தாக்கப்பட்ட சம்பவமும் என்னுடன் தொடர்புப்படுத்தப்படுகிறது.
நடப்பவை எல்லாவற்றுக்கும் நான் தான் காரணமென்றால் எப்படி தான் ஏற்றுக் கொள்வது என TMJ கேட்டார்.
தனது பெயரைக் களங்கடிக்க மேற்கொள்ளப்படும் முயற்சியாகவே அதனைப் பார்ப்பதாக அவர் சொன்னார்.
ஃபைசால் ஹலிம் மீது தாக்குதல் நடந்ததில் இருந்து சில நெட்டிசன்கள் துங்கு இஸ்மாயிலைத் தொடர்புப்படுத்தும் வகையில் பேசி வருவது குறித்து அவர் கருத்துரைத்தார்.
அவரின் அந்த podcast பதிவு வைரலாகி வருகிறது.