தெ ஹெக் , பிப் 23 – அனைத்துலக சட்டங்கள் மற்றும் பலாஸ்தீன மக்களின் உரிமைக்கான ஒவ்வொரு அம்சங்களையும் மீறுவதை இஸ்ரேல் நிறுத்திக்கொள்ள வேண்டும் என மலேசியா கேட்டுக்கொண்டது. நெதர்லாந்தில் The Hague கில் சுய ஆட்சிக்கான பாலஸ்தீனர்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் ICJ எனப்படும் அனைத்துலக நீதிமன்றத்தில் இஸ்ரேலின் நடவடிக்கைகள் குறித்த பொது விசாரணையின்போது மலேசியாவின் கருத்துக்களை வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ மொஹமட் ஹாசன் தெரிவித்தார்.
பாலஸ்தீனர்களுக்கு எதிரான அனைத்து கொள்கைகள் மற்றும் நடைமுறைகளை நிறுத்திக்கொண்டு ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பிரதேசங்களிலிருந்தும் இஸ்ரேல் வெளியேற வேண்டுமென மொஹமட் ஹாசன் வலியுறுத்தினார். மேலும் பாலஸ்தீனர்களுக்கு எதிரான வன்செயல் நடவடிக்கைளை மேற்கொள்ளப் போவதில்லை என்ற உறுதியையும் இஸ்ரேல் வழங்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். அதோடு பாலஸ்தீன மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்காக முழுமையான பரிகாரத்திற்கான அனைத்துலக கடப்பாட்டையும் இஸ்ரேல் நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் அறைகூவல் விடுத்தார்.