![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/05/MixCollage-27-May-2024-02-05-PM-6795.jpg)
அலோர் ஸ்டார், மே-27, கெடா, அலோர் ஸ்டாரில் மெதுவோட்டத்தின் போது பெண்ணொருவர் உடன் அழைத்துச் சென்ற நாய் திடீரென குரைத்தது, கால்வாயில் இருந்து ஆடவரின் சடலம் கண்டெடுக்கப்பட உதவியுள்ளது.
Taman Derga Jaya-வில் நேற்று மாலை அச்சம்பவம் நிகழ்ந்தது.
கால்வாயை நெருங்கியதும் திடீரென நாய் விடாமல் குரைத்ததோடு, கால்களால் மண்ணைத் தோண்டத் தொடங்கியது.
சந்தேகம் அடைந்த அந்த சீன மாது எட்டிப் பார்த்ததில், கால்வாயின் இரும்புக் கம்பிக்குக் கீழே ஆடவரின் சடலத்தைத் கண்டார்.
அது, அப்பகுதியில் தான் அடிக்கடி சந்திக்கும் நபர் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்த அம்மாது போலீசுக்கு தகவல் கொடுத்தார்.
சம்பவ இடம் விரைந்த தடயவியல் துறையின் தொடக்கக் கட்ட பரிசோதனையில், அந்நபரின் மரணத்தில் குற்றவியல் அம்சங்கள் எதுவும் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டது.
மரணமடைந்தவரின் குடும்பத்தாரை விசாரித்ததில், 58 அவ்வாடவர் parkinson எனப்படும் கை நடுக்க நோயால் பாதிக்கப்பட்டவர் என்றும், கடந்த 13 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரிய வந்துள்ளது.
சம்பவத்தன்று MyKad, வங்கி அட்டை, பணப்பை உள்ளிட்ட தனது தனிப்பட்ட உடைமைகள் அனைத்தையும் மனைவியிடம் ஒப்படைத்து விட்டு தான் அவர் வீட்டில் இருந்து வெளியேறியிருக்கிறார்.