Latestஉலகம்

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் மீது கல் வீச்சு; துப்புக் கொடுப்போருக்கு 2 லட்சம் ரூபாய் சன்மானம் அறிவிப்பு

ஹைதராபாத், ஏப்ரல் 16 – இந்தியாவின் ஆந்திர மாநில முதல் அமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி மீது கல் வீசியவர் பற்றி துப்புக் கொடுப்போருக்கு 2 லட்சம் ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.

3 நாட்களாக முயன்றும், மர்ம நபரை பிடிக்க முடியாததால், ஆந்திர போலீஸ் சன்மானத்தை அறிவித்துள்ளது.

கல் வீசிய நபரைத் தேடிப் பிடிப்பதற்காக 6 தனிப்படைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

ஜெகன் மோகன் ரெட்டி 3 நாட்களுக்கு முன்பு விஜயவாடாவில் தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த போது மர்ம நபரால் கல் வீச்சுத் தாக்குதலுக்கு ஆளானார்.

அதில் ஜெகன் மோகன் நெற்றியின் இடது புருவத்தின் மேலே சிறிய காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.

அத்தாக்குதலில் ஜெகன் மோகனுக்கு அருகில் நின்று கொண்டிருந்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவரும் காயமடைந்தார்.

இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஆந்திராவில் மே 13-ஆம் தேதி நடக்கிறது.

25 நாடாளுமன்றத் தொகுதிகளுடன் சேர்த்து 175 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் அங்குத் தேர்தல் நடக்கிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!