![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/04/MixCollage-15-Apr-2024-08-30-PM-9879.jpg)
ஈப்போ , ஏப் 15 – சித்திரை புத்தாண்டை முன்னிட்டு ஈப்போ ஜாலான் லகாட்டில் உள்ள அரச மரத்தடி விநாயகர் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. நேற்று காலையில் விநாயகருக்கு அபிஷேக ஆராதனையும் இரவு
7 மணியளவில் சிறப்பு பூஜையும நடைபெற்றதுடன் அன்னதானமும் வழங்கப்பட்டது. இதில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலத்துக்கொண்டனர். ஈப்போவில் உள்ள ஆர். எஸ்.கிரேன் செர்விஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இந்த சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. ஆண்டு தோறும் இவ்விழாவை சிறப்புடன் நடத்தி வருகிறோம். இந்த ஆண்டு உலக மக்கள் அமைதிக்காக இந்த நடத்தியதாக அதன் உரிமையாளர் எஸ். மணி தெரிவித்தார்.
உலகம் அமைதியாக இருந்தால் மட்டுமே மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ முடியும். ஆகவே மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ அமைதி முக்கியம். நாட்டில் அமைதி சீர்குலைந்தால் பல்வேறு நெருக்கடிகள் ஏற்படும் என்பதால் உலக மக்கள் அமைதியுடன் வாழ பிரார்த்திப்போம் என்று அவர் அனைவரையும் கேட்டுக்கொண்டார். இவ்விழாவில் வணிகப் பெருமகன் டத்தோ தங்கராஜா, ஈப்போ இந்து தேவஸ்தான பரிபாலன சபா பொறுப்பாளர்கள் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.