Latestமலேசியா

கார்த்திகை தீபத் திருவிழா தமிழர்கள் இன்று கொண்டாடுகின்றனர்

கோலாலம்பூர், நவ 26 – மலேசியா உட்பட உலகம் முழுவதிலும் கார்த்திகை தீபத் திருவிழா இன்று கொண்டாடப்படுகிறது. திருக்கார்த்திகை நாள் என்பது தமிழ் மாதமான கார்த்திகை மாதத்தில், கார்த்திகை நட்சத்திரமும் பௌர்ணமியும் இணைந்து வரக்கூடிய நாளில் தமிழர்கள் தங்கள் இல்லங்களிலும் ஆலயங்களிலும் பிரகாசமாக தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாக கொண்டாடும் ஒரு நாளாகும்.

நாட்டிலுள்ள பல ஆலயங்களிலும் இன்று கார்த்திகை திருநாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. இன்றைய கார்த்திகை நாளில் அனைவரின் வாழ்வில் ஒளிமயமான எதிர்காலம் பிரகாசிக்க வணக்கம் மலேசியா கார்த்திகை திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!