![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/06/hu.jpg)
கோலாலம்பூர், ஜூன் 6 – கிளந்தான், கோத்தா பாருவில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் கீழ் மனித கடத்தல் நடவடிக்கை கும்பலை குடிநுழைவுத்துறை முறியடித்துள்ளதோடு அறுவரை கைது செய்தனர். பொதுமக்களிடம் பெறப்பட்ட தகவலைத் தொடர்ந்து 24 முதல் 35 வயதுடைய அவர்கள் கைது செய்யப்பட்டதாக குடிநுழைவுத் துறையின் தலைமை இயக்குனர் Ruslin Jusoh தெரிவித்தார்.
மூன்று வாரங்களாக உளவுத் தகவல்களை திரட்டிய பின்னர் இரண்டு நாட்களுக்கு முன் சந்தேகப் பேர்வழிகளில் ஒருவன் Proton Wira காரை ஓட்டிச் சென்றபோது அவனை குடிநுழைவுத்துறை தடுக்க முயன்றபோது தப்பிச் சென்றான். எனினும் பின்னர் அந்த நபர் கோத்தாபாரு விரைவு பஸ் நிலயத்தில் கைது செய்யப்பட்டான்.
அதன் பிறகு மனிதக் கடத்தல்காரர்களை ஏற்றிச் செல்லும் ஆடவர் ஒருவர் சந்தேகத்திற்குரிய இருவரை கோலாலம்பூருக்கு ஏற்றிச் சென்றபோது கைது செய்யப்பட்டதாக Ruslin கூறினார். அந்த சந்தேகப் பேர்வழிகளில் நால்வர் ஐ.நா அகதிகள் ஆணைக்குழுவின் கார்டுகளை கொண்டிருந்த போதிலும் இதர இருவர் பயண ஆவணங்கள் எதனையும் கொண்டிருக்கவில்லையென அவர் தெரிவித்தனர்.