![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/05/MixCollage-19-May-2024-09-23-AM-6999.jpg)
சைபர் ஜெயா, மே 19 – நாடு முழுவதிலும் உள்ள அரசாங்க மருத்துவமனைகளில் குழந்தைகளின் செவித்திறன் பரிசோதனை மேற்கொள்ளப்படும் . கடந்த ஆண்டு முழுவதிலும் 253,822 குழந்தைகளிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் மூலம் 987 குழந்தைகள் செவித்திறன் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டதாக சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் Dzulkefly Ahmad தெரிவித்தார். பிறந்த சிசுக்களுக்கு தொடக்கத்திலேயே செவித் திறன் பிரச்னையை அறிந்துகொள்வதற்காக 2023 ஆம் ஆண்டு இந்த சோதனை அரசாங்க மருத்துவமனைகளில் அறிமுகப்படுத்தப்பட்டது.
குழந்தை பிறந்த சில நாட்களுக்குள் அவர்களுக்கு உதவி தேவையா என்பதை கண்டறிவதற்கு செவித் திறன் பரிசோதனையை சுகாதார அமைச்சு மேற்கொண்டு வருவதாக Dzulkefly கூறினார். இத்தகைய பரிசோதனைகள் மூலம் செவித்திறன் விவகாரத்தை எதிர்நோக்கும் குழந்தைகளுக்கு முன்கூட்டியே விரைந்து சிகிச்சையை வழங்க முடியும் என அவர் தெரிவித்தார். இல்லாவிட்டால் மாற்றுத் திறனாளி குந்தைகள் செவித்திறன் பிரச்சனையை நீண்ட காலம் எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்பதோடு இதனால் பேசுவதிலும் அவர்கள் நெருக்கடியை எதிர்நோக்க வேண்டிய சூழ்நலை ஏற்படும் என் Dzulkefly சுட்டிக்காட்டினார்.