![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/04/MixCollage-12-Apr-2024-02-49-PM-8321.jpg)
கூலிம் , ஏப் 12 – கூலிமில் தனது கணவரால் தாக்கப்பட்டதாக கூறப்படும் 61 வயது பெண் ஒருவர் மரணம் அடைந்தார். அந்த பெண் குளியல் அறையில் விழுந்துவிட்டதாக இரவு 9 மணியளவில் கூலிம் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டதாக கூலிம் மாவட்ட போலீஸ் தலைவர் Azizul Khairi தெரிவித்தார். அந்த பெண்ணின் உடலை பரிசோதித்தபோது அவரது தலை, முகம் மற்றும் உடலின் பல பகுதிகளில் காயம் இருந்தது . குடும்ப வன்முறை சம்பவத்தினால் அவர் தாக்கப்பட்டிருக்கலாம் என சவ பரிசோதனையின் மூலம் தெரியவந்ததைத் தொடர்ந்து அவரது 57 வயது கணவர் கைது செய்யப்பட்டார் என இன்று வெளியிட்ட அறிக்கையில் Azizul தெரிவித்தார். குற்றவியல் சட்டத்தின் 302 ஆவது விதியின் கீழ் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.