Latestமலேசியா

கெடா சங்லுனில், போலீசாருடன் நடந்த துப்பாக்கி சண்டையில் ஆடவன் மரணம்

அலோஸ்டார், பிப் 17 – கெடாவில் சங்லுன்,நாபோ, ஜாலான் புக்கிட் கெச்சிலில் போலீசாருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 57 வயது ஆடவன் ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான். அந்த சந்தேகப் பேர்வழி போலீசாரை நோக்கி இரண்டு முறை சுட்டதாகவும் அதனைத் தொடர்ந்து போலீஸ் மேற்கொண்ட ‘OP Laras’ நடவடிக்கையில் அந்த நபர் கொல்லப்பட்டதாகக் கெடா போலீஸ் தலைவர் டத்தோ பிசோல் சாலே தெரிவித்தார். ஜாலான் புக்கிட் கெச்சிற்கு அருகே சந்தேகத்திற்கு உரிய நடவடிக்கையின் மூலம் ஆடவன் ஒருவன் காரை ஓட்டிச் சென்றதை போலீஸ் கண்டதால் அக்காரை நிறுத்தும்படி போலீசார் பணித்தனர். அந்த ஆடவன் அந்த உத்தரவை மீறிச் சென்றதோடு போலீஸ்காரர்களை நோக்கி இரண்டு முறை சுட்டதைத் தொடர்ந்து தங்களை தற்காத்துக்கொள்ளும் நோக்கத்தில் பதிலடி நடவடிகையாகப் போலீசார் நான்கு முறை திரும்ப சுட்டனர்.

நெஞ்சில் துப்பாக்கிச் சூட்டுக் காயத்திற்கு உள்ளான அந்த சந்தேகப் பேர்வழி சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே இறந்ததாகப் பிசோல் கூறினார். போதைப் பொருள் மற்றும் சுடும் ஆயுதங்கள் தொடர்பான நான்கு குற்றச்செயல் பின்னணிகளையும் அந்த நபர் கொண்டிருப்பது விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது. அந்த சந்தேகப் பேர்வழியின் காரில் மேற்கொள்ளப்பட்ட் சோதனையில் இரண்டு துப்பாக்கிகள் மற்றும் கணிசமான தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!