Latestமலேசியா

கெடா நீர் விளையாட்டு பூங்காவில், ‘ஆட்டிசம்’ குறைப்பாடுடைய 5 வயது சிறுமி, மூழ்கி மரணம்

கெபாலா பாத்தாஸ், ஜூன் 5 – ஆட்டிசம் குறைப்பாட்டால் பாதிக்கப்பட்ட ஐந்து வயது சிறுமி ஒருவர், கெடா, பெர்தாமிலுள்ள நீர் விளையாட்டு பூங்காவில் மூழ்கி உயிரிழந்தார்.

நேற்று மாலை மணி 3.30 மணி வாக்கில், தனது குடும்பத்தாருடன் குளிக்கச் சென்ற அச்சிறுமியை முதலில் காணவில்லை என வட செபராங் பெராய் மாவட்ட இடைக்கால போலீஸ் தலைவர் ACP ஜுல்கெப்ளி சுலைமான் தெரிவித்தார்.

சிறுமியை கண்டுபிடிக்க, அவரது தாயார் உடனடியாக, சம்பந்தப்பட்ட நீர் விளையாட்டு பூங்கா பணியாளர்களின் உதவியை நாடியுள்ளார்.

அதனை தொடர்ந்து, அந்த நீர் விளையாட்டு பூங்காவில், கட்டுமானத்தில் இருந்த குளம் ஒன்றிலிருந்து, அச்சிறுமியின் உடல் மீட்கப்பட்டதை, ஜுல்கெப்ளி உறுதிப்படுத்தினார்.

கெப்பாலா பத்தாஸ் மருத்துவமனையில் சவப்பரிசோதனைக்கு பின், அச்சிறுமியின் உடல் நல்லடக்கம் செய்யப்படுவதற்காக சிலாங்கூருக்கு கொண்டு வரப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!