![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2023/12/MixCollage-06-Dec-2023-08-51-AM-6445.jpg)
கோலாலம்பூர், டிச 6 – அண்மையில் கோவிட் -19 தொற்று அதிகரித்ததைத் தொடர்ந்து முகக் கவசம் வாங்குவோரின் எண்ணிக்கை உயர்ந்திருப்பதாக சுகாதார நலன் தொடர்பான பொருட்களின் தயாரிப்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
முகக்கவரிக்கான விற்பனை அதிகரித்துள்ளது. கோவிட் -19 தொற்று அதிகரிப்பதால் பொதுமக்களில் சிலர் கையிருப்பில் வைத்திருப்பதற்காக அதை வாங்கக்கூடும் என ஐடியல் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஹமினுடின் ஹமிட் தெரிவித்தார்.
நடப்பு கையிருப்பின் மூலம் முகக் கவசத்திற்கான தமது நிறுவனம் இன்னமும் சமாளிக்கக்கூடிய நிலையில் இருப்பதாகவும் ஆண்டு இறுதியின்போது மருத்துவமனையில் அதற்கான விற்பனை அதிகரிப்பது வழக்கமான ஒன்று என்றும் அவர் கூறினார்.
அதோடு எந்த நேரத்திலும் முகக் கவசத்திற்கான உற்பத்தியை அதிகரிப்பதற்கும் தாங்கள் தயாராய் இருப்பதாகவும் ஹமினுடின் தெரிவித்தார்.