![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2023/12/MixCollage-12-Dec-2023-11-26-AM-905.jpg)
கோலாலம்பூர், டிச 12 – நாட்டில் கோவிட் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பாதுகாப்பு நடடிக்கையில் முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். நவம்பர் 26 ஆம்தேதி தொடங்கி டிசம்பவர் 2 ஆம் தேதி வரையிலான 48 ஆவது வாரத்தில் கோவிட் – 19 தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 6,796 ஆக உயர்ந்தது. அவர்களில் 72.9 விழுக்காட்டினர் புதிய ஓமிக்ரான் திரிபுனால் பாதிக்கப்பட்டனர். அதற்கு முந்தைய வாரத்தில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3,626ஆக இருந்ததாக சுகாதாரத்துறையின் தலைமை இயக்குனர் டத்தோ டாக்டர் முகமட் ராட்ஸி அபு ஹாசன் தெரிவித்தார்.