ஜெருசலம், நவ 28 – இஸ்ரேலுக்கும் ஹமாஸ் தரப்புக்குமிடையே மேலும் இரண்டு நாட்களுக்கு அமைதி உடன்பாடு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் ஹமாஸ் தரப்பு மேலும் பிணையாளிகளை விடுவிக்கும் என அறிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை தொடங்கிய நான்கு நாள் போர் நிறுத்த உடன்பாட்டைத் தொடர்ந்து சில பிணையாளிகளை ஹமாஸ் விடுவித்துள்ள வேளையில் இஸ்ரேலும் தன்வசம் சிறையில் வைத்திருந்த பாலஸ்தீன கைதிகளை விடுதலை செய்துள்ளது. விடுவிக்கப்படும் ஒவ்வொரு 10 பிணையாளிகளுக்கு பதிலாக கூடுதலாக ஒரு நாள் அமைதி உடன்பாட்டை நீட்டிப்பதற்கு முன்வருவதாக இஸ்ரேல் அறிவித்திருக்கிறது. அதோடு காஸா முனைக்கு மனிதாபிமான உதவி பொருட்களை கொண்டுச் செல்லும் திட்டத்திற்கும் மேலும் இரு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டடுள்ளது.