![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/06/kinda.jpg)
அலோர் காஜா, ஜூன் 10 – மழலையர் பள்ளியைச் சேர்ந்த இரண்டு குழந்தைகளை பராமரிக்கும் விவகாரத்தில் அலட்சியமாக அல்லது பொறுப்பு உணர்வுடன் நடந்துகொள்ளத் தவறியதாக மழலையர் பராமரிப்பு நிலையத்தின் மூன்று ஆசிரியைகள் மற்றும் பராமரிப்பு உதவியாளர் மீது தனித் தனியாக குற்றஞ்சாட்டப்பட்டது.
41 வயது ஜமியா அப்துல் ரஹ்மான் (Jamia Abd Rahman), 24 வயதுடைய நோர் ஹனிஸ் அஸ்வானி கஷாலி (Nur Hanis Azwani Ghazali), 33 வயதுடைய ஹப்ஷா அப்துல் ரசாக் (Hafsah Ab Razak) ஆகிய ஆசிரியைகளும் மழலையர் பள்ளியின் உதவியாளர் நுர் டியானா ஜைனுடின் (Nur Diyana Zainuddin) ஆகியோர் மீது மலாக்கா செஷன்ஸ் நீதிமன்றத்தில் தனித்தனியாக இன்று குற்றஞ்சாட்டப்பட்டது.
அந்த நால்வரும் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்தனர். உடல் மற்றும் மனோநிலை பாதிக்கும் வகையில் 4வயது மற்றும் ஆறு வயது சிறார்களை பாதுகாப்பதில் அந்த நால்வரும் அலட்சியத்துடன் செயல்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டனர்.
Tanjung Minyak , Tamam Cheng Indah வில் உள்ள Bonda மழலையர் பள்ளியில் கடந்த மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை அவர்கள் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிபதி Rohatul Akmar Abdulah மற்றும் நீதிபதி Azararoni Abdul Rahmaad முன்னிலையில் குற்றஞ்சாட்டப்பட்டனர். அந்த நான்கு பெண்களும் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் மீதான குற்றச்சாட்டு அடுத்த மாதம் 24 மற்றும் 30ஆம் தேதியில் மறுவாசிப்புக்கு செவிமடுக்கப்படும்.