Latestமலேசியா

சிலாங்கூர், நெகிரி செம்பிலானில் பெரிக்காத்தான் வெற்றி பெறும்; முஹிடின்

கோலாலம்பூர், மார்ச் 13 – பக்காத்தான் ஹரப்பான் வசமுள்ள மாநிலங்களை அடுத்த மாநிலத் தேர்தலில் பெரிக்காத்தான் நெஷனல் கைப்பற்றினால், சிலாங்கூர், நெகிரி செம்பிலான் மாநிலங்களில் பெர்சத்துவைச் சேர்ந்தவர் மெந்திரி பெசாராக நியமிக்கப்படுவார் என , அக்கட்சியின் தலைவர் டான் ஶ்ரீ முஹிடின் யாசின் தெரிவித்தார் .

இவ்வேளையில், பினாங்கில் யாரை முதலைமைச்சராக நியமிப்பது என்பது அம்மாநிலத்தில் வெற்றி பெற்ற மொத்த தொகுதிகளின் அடிப்படையில் முடிவு செய்யப்படுமென அவர் கூறினார்.

மாநில தேர்தலை எதிர்கொள்ளும் அதே வேளை, எந்தெந்த மாநிலங்களில் யாரை மெந்திரி பெசாராக நியமிப்பது, சட்டமன்றத் தலைவராகவும் துணைத் தலைவராகவும் யாரை தேர்வு செய்வது , மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்களாக யாருக்கு, பொறுப்புகளை வழங்குவது என கூட்டணி கட்சிகளுக்கு இடையே முடிவு செய்யப்பட்டு விட்டதாகவும் முஹிடின் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!