கோலா திரெங்கானு, நவ 9- உறுதியற்ற வானிலையால் இந்த வார தொடக்கத்திலிருந்து கோலா திரெங்கானு உட்பட நாட்டின் முக்கிய நகர்களில் பல்வேறு மீன்களின் விலை மூன்று ரிங்கிட் முதல் 5 ரிங்கிட் வரை உயர்ந்துள்ளது. கோலா திரெங்கானுவில் மக்கள் அதிகமாக விரும்பி உட்கொள்ளும் செலாயாங் மீன் ஒரு கிலோ ஆறு ரிங்கிட்டிலிருந்து 10 ரிங்கிட்டாக உயர்ந்தது. கெம்போங் மீன் ஒரு கிலோ 17 ரிங்கிட்டிலிருந்து 20 ரிங்கிட்டாக அதிகரித்தது. கிழக்குக் கரை பருவ மழையினால் கடல் கொந்தளிப்பாக இருப்பதால் மீனவர்கள் கடலுக்கு சென்றாலும் மீன்கள் கிடைப்பதில் பற்றாக்குறை நிலவுவதாக கூறப்படுகிறது. இதனால் சந்தையில் மீன் விநியோகம் குறைவாக இருப்பதால் விலை அதிகமாக இருப்பதாக வர்த்தகர்கள் கூறுகின்றனர். ஒரு கிலோ 16 ரிங்கிட்டாக விற்கப்பட்ட ஈகான் செலார் (Ikan Selar) தற்போது ஒரு கிலோவுக்கு 20 ரிங்கிட்டாக உயர்ந்திருப்பதும் தெரியவந்துள்ளது.
Related Articles
பெற்றோர்கள் கவனத்திற்கு! இந்தியாவில் விற்கப்படும் குழந்தைகளுக்கான நெஸ்லே உணவில் அதிகமான சர்க்கரை சேர்ப்பு
14 hours ago
கோலாலம்பூர் – சிலாங்கூர் இந்திய வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் பதவிக்கு நிவாஸ் ராகவன் – வி.கே.கே ராஜசேகரன் நேரடிப் போட்டி
15 hours ago