![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/04/MixCollage-26-Apr-2024-05-20-PM-3872.jpg)
பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 26 – சுங்கை சிலாங்கூர் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில், பராமரிப்பு பணிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், சிலாங்கூரில் பல பகுதிகளுக்கு திட்டமிடப்பட்ட தண்ணீர் தடை இருக்காது.
சிலாங்கூரிலும், கோலாலம்பூரிலும் திட்டமிடப்பட்ட தண்ணீர் தடை குறித்த அறிவிப்பு, கடந்த மூன்று நாட்களுக்கு முன் “ஆயிர் சிலாங்கூர்” செயலியில் வெளியிடப்பட்டது.
அதனால், அவ்விரு பகுதிகளிலும் உள்ள, நூற்றுக்கணக்கான இடங்க்களில் நீர் விநியோக தடை ஏற்படுமென கூறப்பட்டது.
மே 14-ஆம் தேதி தொடங்கி 16-ஆம் தேதி வரை இரு நாட்களுக்கு திட்டமிடப்பட்டிருந்த பராமரிப்பு பணிகள் காரணமாக, சிலாங்கூரில், பெட்டாலிங், கிள்ளான், ஷா ஆலம், கோம்பாக், உலு கிள்ளான், குவாலா சிலாங்கூர் ஆகிய மாவட்டங்களிலும், கோலாலம்பூரில் சில பகுதிகளிலும் நீர் விநியோக தடை ஏற்படுமென கூறப்பட்டது.
சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வரும் போதும், அது தொடர்பான அறிவிப்பு இன்று அகற்றப்பட்டுள்ளது.
அந்த பராமரிப்பு பணிகள் புதிய தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், பின்னர் அறிவிக்கப்படும் தேதியில் அது நடைபெறும் எனவும், ஆயிர் சிலாங்கூர் தனது முகநூல் பதிவு வாயிலாக தெரிவித்துள்ளது.
மேல் விவரங்களுக்கு, பொதுமக்கள் தங்கள் அகப்பக்கத்தை வலம் வரலாம் எனவும் ஆயிர் சிலாங்கூர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளது.