Latestமலேசியா

மெர்டேக்கா சதுக்கத்தில் குத்திக் கொண்ட மோட்டார் சைக்கிளோட்டிகள்; வைரல் வீடியோவை விசாரிக்கும் போலீஸ்

கோலாலம்பூர், ஜூன்-1 – கோலாலம்பூர் மெர்டேக்கா சதுக்கத்தில் வெள்ளிக்கிழமையன்று மோட்டார் சைக்கிளோட்டிகள் கும்பல் தங்களுக்குள்ளேயே அடித்துக் கொண்ட சம்பவம் குறித்து போலீஸ் விசாரிக்கிறது.

இதுவரை யாரும் புகாரளிக்கவில்லை;

இருந்தாலும் வைரலான வீடியோ அடிப்படையில் விசாரணைத் தொடங்கியிருப்பதாக, டாங் வாங்கி போலீஸ் தலைவர் Sulizmie Affendy Sulaiman தெரிவித்தர்.

முன்னதாக, சுல்தான் அப்துல் சமாட் கட்டடம் முன்புறமுள்ள மெர்டேக்கா சதுக்கத்தில் மோட்டார் சைக்கிளோட்டிகள் கும்பலொன்று கூடியதும், பின்னர் அவர்களுக்குள் சண்டை மூண்டதும் வைரல் வீடியோவில் தெரிந்தது.

ஒருவரை ஒருவர் குத்திக் கொண்டதோடு ஹெல்மட்டாலும் அவர்கள் சரமாரியாகத் தாக்கிக் கொண்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!